Wednesday, October 5, 2016

கோவை விசாரணை கைதி மரணம் நீதி விசாரணை தேவை SDPI கோரிக்கை

#கோவை சிறையில் உரிய சிகிச்சைக்கு அனுமதி அளிக்காததால் சிறைக்கைதி மரணம்! -

#நீதிவிசாரணை நடத்த தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

******************
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.எம். தெகலான் பாகவி விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கைதி ஒஜீர் (வயது 48) இன்று மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

அவருக்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாகவே நெஞ்சுவலி அறிகுறி இருந்துள்ள நிலையில், அதற்கான உரிய சிகிச்சையை வெளியில் உள்ள மருத்துவமனையில் பெறுவதற்கு சிறைத்துறை மறுத்து, சிறையில் அளிக்கப்படும் சாதாரண சிகிச்சையை மட்டும் அளித்துள்ளது.

இதன் காரணமாக அவர் மரணமடைந்துள்ளார்.

இந்த மரணம் குறித்து தமிழக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், மரணடைந்துள்ள சிறைக் கைதியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு அளிக்க வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

கோவை சிறையில் இதற்கு முன்னரும் உரிய சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்படாதன் காரணமாக, சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறைக் கைதிகள் சபூர் ரஹ்மான், தஸ்தகீர் ஆகியோர் மரணமடைந்துள்ளனர்.

இவர்களுக்கு உரிய காலத்தில் முறையான மருத்துவ சிகிச்சை பெற அனுமதி அளிக்கப்பட்டிருந்தால் அவர்களின் மரணத்தை தவிர்த்திருக்க முடியும்.

பொதுவாக இதுபோன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறைக் கைதிகளுக்கு, வெளியில் உள்ள மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெறும் அனுமதி வழங்கப்படும் சூழலில், முஸ்லிம் கைதிகளுக்கு மட்டும் அத்தகைய அனுமதி மறுக்கப்படுகின்றது.

இதன் மூலம் ஆயுள் தண்டனை என்பது முஸ்லிம் சிறைக் கைதிகளுக்கு மட்டும் மரணதண்டனையாக மாறிவருகிறது.

சிறைவாசி அபுதாஹிர் குணப்படுத்த முடியாத எஸ்எல்சி எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல்லை சேர்ந்த சிறைவாசி மீரான் மொய்தீனுக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

கடுமையான நோயால் அவதிப்படுகிறவர்களை, உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை விடுதலை செய்யலாமென தமிழ்நாடு சிறைவிதி 632 பிரிவு சொல்கிறது.

சட்டப்படியான அந்த வாய்ப்பு முஸ்லிம் சிறைக் கைதிகளுக்கு மறுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்குரிய சிகிச்சைகளுக்கும் அனுமதி மறுக்கப்படுகின்றது.

இதன் காரணமாகத்தான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடிவரும் அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என, கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

ஆனால், தமிழக அரசு இந்த கோரிக்கையை கண்டுகொள்ளாமல் தட்டிக்கழித்து வருகின்றது.

கோவை சிறையில் மட்டும் 5க்கும் மேற்பட்ட முஸ்லிம் சிறைக் கைதிகள் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெளியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர்.

ஆனால், சிறைத்துறை அதற்கு அனுமதி மறுத்து வருகின்றது. இதன் காரணமாக அவர்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே, தமிழக அரசு அந்த சிறைக் கைதிகள் உரிய காலத்தில் முறையான மருத்துவ சிகிச்சை பெற  அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், கோவை சிறையில் உரிய சிகிச்சைக்கு அனுமதி கிடைக்காமல் மரணமடைந்த சிறைக் கைதி ஒஜீர் மரணம் குறித்து, நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

https://m.facebook.com/sdpitamilnadu/

கோவை விசாரணை கைதி மரணம் நீதி விசாரணை தேவை SDPI கோரிக்கை

#கோவை சிறையில் உரிய சிகிச்சைக்கு அனுமதி அளிக்காததால் சிறைக்கைதி மரணம்! -

#நீதிவிசாரணை நடத்த தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

******************
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.எம். தெகலான் பாகவி விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கைதி ஒஜீர் (வயது 48) இன்று மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

அவருக்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாகவே நெஞ்சுவலி அறிகுறி இருந்துள்ள நிலையில், அதற்கான உரிய சிகிச்சையை வெளியில் உள்ள மருத்துவமனையில் பெறுவதற்கு சிறைத்துறை மறுத்து, சிறையில் அளிக்கப்படும் சாதாரண சிகிச்சையை மட்டும் அளித்துள்ளது.

இதன் காரணமாக அவர் மரணமடைந்துள்ளார்.

இந்த மரணம் குறித்து தமிழக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், மரணடைந்துள்ள சிறைக் கைதியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு அளிக்க வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

கோவை சிறையில் இதற்கு முன்னரும் உரிய சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்படாதன் காரணமாக, சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறைக் கைதிகள் சபூர் ரஹ்மான், தஸ்தகீர் ஆகியோர் மரணமடைந்துள்ளனர்.

இவர்களுக்கு உரிய காலத்தில் முறையான மருத்துவ சிகிச்சை பெற அனுமதி அளிக்கப்பட்டிருந்தால் அவர்களின் மரணத்தை தவிர்த்திருக்க முடியும்.

பொதுவாக இதுபோன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறைக் கைதிகளுக்கு, வெளியில் உள்ள மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெறும் அனுமதி வழங்கப்படும் சூழலில், முஸ்லிம் கைதிகளுக்கு மட்டும் அத்தகைய அனுமதி மறுக்கப்படுகின்றது.

இதன் மூலம் ஆயுள் தண்டனை என்பது முஸ்லிம் சிறைக் கைதிகளுக்கு மட்டும் மரணதண்டனையாக மாறிவருகிறது.

சிறைவாசி அபுதாஹிர் குணப்படுத்த முடியாத எஸ்எல்சி எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல்லை சேர்ந்த சிறைவாசி மீரான் மொய்தீனுக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

கடுமையான நோயால் அவதிப்படுகிறவர்களை, உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை விடுதலை செய்யலாமென தமிழ்நாடு சிறைவிதி 632 பிரிவு சொல்கிறது.

சட்டப்படியான அந்த வாய்ப்பு முஸ்லிம் சிறைக் கைதிகளுக்கு மறுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்குரிய சிகிச்சைகளுக்கும் அனுமதி மறுக்கப்படுகின்றது.

இதன் காரணமாகத்தான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடிவரும் அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என, கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

ஆனால், தமிழக அரசு இந்த கோரிக்கையை கண்டுகொள்ளாமல் தட்டிக்கழித்து வருகின்றது.

கோவை சிறையில் மட்டும் 5க்கும் மேற்பட்ட முஸ்லிம் சிறைக் கைதிகள் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெளியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர்.

ஆனால், சிறைத்துறை அதற்கு அனுமதி மறுத்து வருகின்றது. இதன் காரணமாக அவர்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே, தமிழக அரசு அந்த சிறைக் கைதிகள் உரிய காலத்தில் முறையான மருத்துவ சிகிச்சை பெற  அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், கோவை சிறையில் உரிய சிகிச்சைக்கு அனுமதி கிடைக்காமல் மரணமடைந்த சிறைக் கைதி ஒஜீர் மரணம் குறித்து, நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

https://m.facebook.com/sdpitamilnadu/

Tuesday, October 4, 2016

உள்ளாட்சி தேர்தல் ரத்து

உள்ளாட்சி தேர்தல் ரத்து குறித்து வழக்கறிஞர் விளக்கம்
http://dhunt.in/1xOxT?ss=wsp
via Dailyhunt

Monday, October 3, 2016

மேலப்பாளையம் SDPI 8 வார்டுகளில் போட்டி

#SDPI 8 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
#மேலப்பாளையம்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

இன்று 03-10-2016  எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக நெல்லை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுவை மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் எட்டு 8 வார்டுகளுக்கு தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்களின் விபரம் : 

29வது வார்டு – M. அனீஸ் பாத்திமா (க/பெ  முஸ்தபா ஜாபர் அலி)

31 வது வார்டு – I. ஹயாத்துதீன் ( த/பெ – இஸ்மாயில்)

32 வது வார்டு – முகம்மது பாத்திமாள் (க/ பெ – ஆமட்டி சேக் மன்சூர்)

33 வது வார்டு -  M. அஸ்மா (க/பெ – முகம்மது ஈசாக்)

34 வது வார்டு – S.A. அப்துல் காதர் (த/பெ – அஹமது அலி)

35 வது வார்டு – ரஹ்மத் (க/பெ – ஹனீபா)

36 வது வார்டு – S. பாத்திமா  (க/பெ – சாகுல் ஹமீது உஸ்மானி)

37 வது வார்டு -  S. ஃபாத்திமா க/பெ – சலீம்

ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு தாக்கலின் போது எஸ்.டி.பி.ஐ கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் K.S. சாகுல் ஹமீது உஸ்மானி, பொதுச்செயலாளர் N.இலியாஸ், மாவட்ட செயலாளர் ஹயாத் முஹம்மது, பாளை தொகுதி தலைவர் சேக் தாவூத், செயலாளர் மூசல் காழீம், துனை தலைவர் ஜாஃபர், இணை செயலாளர் ஜெபா, தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் சலீம், இஷாக், அப்துல் காதர், மற்றும் பகுதி நிர்வாகிகள் பஷீர், கல்வத், மீரான், சுல்தான் பாதுஷா, கட்சியின் செயல்வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Saturday, October 1, 2016

மேலப்பாளையம் மண்டலத்தை கைப்பற்றுகிறது SDPI

மேலப்பாளையம் மண்டலத்தை கைப்பற்றுகிறது SDPI

01.10.2016

நெல்லை மாநகராட்சியின் முக்கிய அங்கமாக திகழ்வது  மேலப்பாளையம் மண்டலமே

மேலப்பாளையம் மண்டலத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளன அதில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும்  9 வார்டுகள் உள்ளன

மீதமுள்ள 5 வார்டுகள் மேலப்பாளையத்தின் வெளி பகுதியில் அமைத்துள்ளது

மேலப்பாளையம் மண்டலத்தை தீர்மானிப்பது இந்த 9 வார்டுகளே

இந்த வார்டுகளில் யாருக்கு மக்களுடைய செல்வாக்கு உள்ளது
என்று பார்த்தால் ஆளும் அதிமுக கட்சியின் மண்டல தலைவரின் செயல்பாடுகள் மக்களுக்கு பயனளிப்பதாக இல்லை

முன்னாள் திமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் தங்களுடைய வருமானதிற்காக யாரையும் எதிர்பதும் இல்லை மக்கள் நல திட்டத்திற்காக வீதி இறங்கி போராடியதும் இல்லை

மேலப்பாளையம் மாநகராட்சிக்கு உட்பட பகுதியாக இருந்தாலும் இன்னும் அடிப்படை வசதிகள் கூட முழுமை பெறவில்லை

மாநகராட்சி உள்ள அந்தஸ்தில் பின்தங்கிய உள்ளது

முறையாக வரி செலுத்தும் மக்களிடம் காசை வசூல் செய்ய காட்டும் அக்கறையை மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் மேலப்பாளையம் மண்டலம் பின்னுக்கே உள்ளது

தரமான சாலை இல்லை ,சுத்தமான குடிநீர் இல்லை ,கழிவு நீர் செல்ல கூட ஓடைகள் பணிகள் நிறைவு இல்லை

பாசனத்திற்கு மற்றும் மக்கள் பயன்பாட்டில் இருந்த பாளையம் கால்வாய் கழிவு நீரால் மூழ்கடிக்கப்பட்டு நோய்கள் தாக்கும் அபாய நிலையே உள்ளது

பாதாள சாக்கடைத்திட்டம் பலகொடியில் மக்கள் வரிபணத்தை வீண்டித்தும் எந்த ஒரு புரோஜனமும் இல்லாமல் உள்ளது

இன்று வரை இந்த திட்டத்திற்கு வசூல் செய்யப்படுகிறது யாரும் புதிய வீடு கட்டவோ வீட்டு தீர்வை பெயர் மாற்றவோ பாதாள சாக்கடைத்திட்டற்கு பெரும் தொகை கொடுத்தால் மட்டுமே மாநகராட்சி அனுமதி அளிக்கும்

அரசு மருத்துவ மனை

மேலப்பாளையம் மக்கள் மட்டுமல்லாமல் சுற்று வாட்டார பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெறும் மருத்துவ மனையில் போதிய டாக்டர்கள் இல்லை
,போதிய செவிலியர்கள் இல்லை , போதிய மருத்துகட்டும் ஊழியர்கள் இல்லை ,போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லை ,போதிய உயிர்காக்கும் மருந்துகள் இல்லை

ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்வதால் குறைவான மருத்துவர்களால் மக்கள் மீது எரிந்து விழுவதை தவிர்த்து முறையான சிகிச்சை அளிக்க முடியவில்லை

காலிபணியிங்கள் இருந்தும் நிரப்ப மருத்துவ நிர்வாகம் தயாராக இல்லை

முதியோர் உதவி தொகை பெறுதல் ,அரசின் நலதிட்டங்களை பெறுதல் குறித்து எல்லா மாமன்ற உறுப்பினர்களும் கையூட்டு பெற்று வேலை செய்கிளார்களே தவிர்த்து

அரசின் திட்டங்களை செயல்படுத்த எந்த முகாம்களையும் மக்கள் மத்தியில் எடுத்து செல்ல நடத்த வில்லை

நகரின் தூய்மை

துப்புரவு பணியாளர்கள் குறைவு

குப்பைகளை அள்ளும் வாகனங்கள் குறைவு

ஊரெங்கும் குப்பை ,வழியெங்கும் சுகாதார சீர்கேடுகள்
.இதை பற்றியெல்லாம்

மாமன்றத்தில் பேசி மக்கள் நலனுக்காக உழைக்க அதிமுக வோ திமுக வோ சுயேச்சை உறுப்பினர்களோ இதுவரை எதையும் சாதிக்க முடியவில்லை இனிமேலும் சாதிக்கும் அவர்களால் முடியாது

கையூட்டு பெற்று சாலை அமைப்பதும் ,திட்டத்தை நிறைவேற்றும் இவர்களால் மக்கள் நலனுக்காக எதை சாதிக்க முடியும்

யாரால் முடியும் மக்கள் மீது அக்கரையுள்ள ,ஊரின் மீது பற்றுள்ள ,வருங்கால சந்ததிகள் நலமுடன் வளமுடன் வாழ செயல் திட்டத்துடன் செயல் படும் உண்மையான அரசியல் கட்சியின் மூலம் மட்டுமே முடியும்

யார் அவர்கள்

இந்த மேலப்பாளையம் மக்களின் நலனுக்காக வீதி இறங்கி போராடும்

தூசி பறக்கும் சாலைகளை தரமான சாலை அமைக்க போராடிய கட்சி

கழிவு நீரால் முழ்கழிக்கபட்ட பாளையம் கால்வாய் மீட்டெடுக்க போராடிய கட்சி

தரமான குடிநீர் கிடைக்க வீதி இறங்கி போராடிய கட்சி

மழை காலங்களில் மக்களுக்கு டெங்கு மற்றும் விஷகாச்சலை தடுக்க வீதியெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பயன் பெற  மருத்துவ முகாம்களை நடத்திய கட்சி

விபத்தோ ,அகால மரணமோ எந்த நேரத்திலும் மக்களுக்கு பாதிக்கப்பட்ட உடன் களத்தில் நிற்கும் கட்சி

பொய்யான காரணங்களை கூறி முஸ்லிம் இளைஞர்களின்  கைதுக்கு எதிராக முதலில் களம் காணும் கட்சி

மக்கள் சேவைக்காக தங்களின் சுய தேவைகளையும் உதறிவிட்டு மக்கள் நலனுக்காக உழைக்கும் கட்சி

செய்த உதவிக்காக மக்களின் பாரட்டுகளை விட இறைவனின் உவப்பை பெற விரும்பும் கட்சி

மக்கள் நலனுக்காக தன்னை அனுதினமும் அர்ப்பணிக்கும் இந்த SDPI கட்சியே  மேலப்பாளையம் மண்டலத்தை உறுதியாக கைப்பற்றும்

மக்களுக்காக என்றும் உழைத்திடும்

கடந்த சட்டமன்ற தேர்தலில் மேலப்பாளையம் மண்டலத்தில் அதிக வாக்குகளை பெற்றுள்ளது

என்பதை யாரும் மறுக்க முடியாது

வெற்றிக்கான வழி தொலைவில் இல்லை
இறைவனின் நாட்டத்தோடு SDPI கட்சி போட்டியிடும் அனைத்து இடங்களிலும் வெற்றி வாகை சூடும்

#முகம்மது இப்னு ஆதில்பரீத் -#மேலப்பாளையம்