நெல்லை
மேலப்பாளையம் பழுதான சாலைகளை சரி செய்ய கோரி SDPI கட்சி தூய்மை போராட்டம்
09.01.2016
SDPI கட்சி பசுமை மேலப்பாளையம் திட்டத்தின் சார்பாக சாலையில் சென்ற மக்களுக்கு சுவாச கவசம் (mask )கொடுத்து தூய்மை பிரச்சாரம்
மேலப்பாளையம் சாலைகள் மிகவும் பழுதடைந்து வாகன போக்குவரத்தால் தூசியாக பறக்கிறது
ஏற்கனவே மக்கள் மழைக்காலங்களில் காச்சலில் அவதி பட்டு மீளாத நிலையில் அரசின் அலட்சிய போக்கால் மக்களுக்கு ஆஸ்துமா ,அலர்ஜி வியாதிகள் உருவாக தூசி காரணமாக அமைகிறது .
மக்கள் நலனில் உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் விரைவில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
இல்லையேல் SDPI கட்சி புதுவிதமான வீரியமான மக்கள் நலன் காக்கும் போராட்டத்தை தொடர்ந்து நடத்தும்
இன்று நடைபெற்ற போராட்டத்தில் SDPI கட்சி மேலப்பாளையம் பகுதி தலைவர் பஷீர் ,
செயலாளர் மீரான் ,துணைத்தலைவர் கல்வத் ,தொகுதி செயற்குழு உறுப்பினர் அப்துல் காதர் ,37 வார்டு தலைவர் காதர் ,மற்றும் முகம்மது கொளஸ் ஆகியோர் கலந்து கொண்டு
சந்தை ரவுண்டானா ,V.S.T பள்ளி வாசல் ஆகிய இடங்களில் வாகனங்களில் சென்ற மக்களுக்கு சுவாச கவசம் (Mask ) வழங்கினர்
https://m.facebook.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-961871540494053/
No comments:
Post a Comment