மேலப்பாளையம் மண்டலத்தை கைப்பற்றுகிறது SDPI
01.10.2016
நெல்லை மாநகராட்சியின் முக்கிய அங்கமாக திகழ்வது மேலப்பாளையம் மண்டலமே
மேலப்பாளையம் மண்டலத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளன அதில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் 9 வார்டுகள் உள்ளன
மீதமுள்ள 5 வார்டுகள் மேலப்பாளையத்தின் வெளி பகுதியில் அமைத்துள்ளது
மேலப்பாளையம் மண்டலத்தை தீர்மானிப்பது இந்த 9 வார்டுகளே
இந்த வார்டுகளில் யாருக்கு மக்களுடைய செல்வாக்கு உள்ளது
என்று பார்த்தால் ஆளும் அதிமுக கட்சியின் மண்டல தலைவரின் செயல்பாடுகள் மக்களுக்கு பயனளிப்பதாக இல்லை
முன்னாள் திமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் தங்களுடைய வருமானதிற்காக யாரையும் எதிர்பதும் இல்லை மக்கள் நல திட்டத்திற்காக வீதி இறங்கி போராடியதும் இல்லை
மேலப்பாளையம் மாநகராட்சிக்கு உட்பட பகுதியாக இருந்தாலும் இன்னும் அடிப்படை வசதிகள் கூட முழுமை பெறவில்லை
மாநகராட்சி உள்ள அந்தஸ்தில் பின்தங்கிய உள்ளது
முறையாக வரி செலுத்தும் மக்களிடம் காசை வசூல் செய்ய காட்டும் அக்கறையை மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் மேலப்பாளையம் மண்டலம் பின்னுக்கே உள்ளது
தரமான சாலை இல்லை ,சுத்தமான குடிநீர் இல்லை ,கழிவு நீர் செல்ல கூட ஓடைகள் பணிகள் நிறைவு இல்லை
பாசனத்திற்கு மற்றும் மக்கள் பயன்பாட்டில் இருந்த பாளையம் கால்வாய் கழிவு நீரால் மூழ்கடிக்கப்பட்டு நோய்கள் தாக்கும் அபாய நிலையே உள்ளது
பாதாள சாக்கடைத்திட்டம் பலகொடியில் மக்கள் வரிபணத்தை வீண்டித்தும் எந்த ஒரு புரோஜனமும் இல்லாமல் உள்ளது
இன்று வரை இந்த திட்டத்திற்கு வசூல் செய்யப்படுகிறது யாரும் புதிய வீடு கட்டவோ வீட்டு தீர்வை பெயர் மாற்றவோ பாதாள சாக்கடைத்திட்டற்கு பெரும் தொகை கொடுத்தால் மட்டுமே மாநகராட்சி அனுமதி அளிக்கும்
அரசு மருத்துவ மனை
மேலப்பாளையம் மக்கள் மட்டுமல்லாமல் சுற்று வாட்டார பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெறும் மருத்துவ மனையில் போதிய டாக்டர்கள் இல்லை
,போதிய செவிலியர்கள் இல்லை , போதிய மருத்துகட்டும் ஊழியர்கள் இல்லை ,போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லை ,போதிய உயிர்காக்கும் மருந்துகள் இல்லை
ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்வதால் குறைவான மருத்துவர்களால் மக்கள் மீது எரிந்து விழுவதை தவிர்த்து முறையான சிகிச்சை அளிக்க முடியவில்லை
காலிபணியிங்கள் இருந்தும் நிரப்ப மருத்துவ நிர்வாகம் தயாராக இல்லை
முதியோர் உதவி தொகை பெறுதல் ,அரசின் நலதிட்டங்களை பெறுதல் குறித்து எல்லா மாமன்ற உறுப்பினர்களும் கையூட்டு பெற்று வேலை செய்கிளார்களே தவிர்த்து
அரசின் திட்டங்களை செயல்படுத்த எந்த முகாம்களையும் மக்கள் மத்தியில் எடுத்து செல்ல நடத்த வில்லை
நகரின் தூய்மை
துப்புரவு பணியாளர்கள் குறைவு
குப்பைகளை அள்ளும் வாகனங்கள் குறைவு
ஊரெங்கும் குப்பை ,வழியெங்கும் சுகாதார சீர்கேடுகள்
.இதை பற்றியெல்லாம்
மாமன்றத்தில் பேசி மக்கள் நலனுக்காக உழைக்க அதிமுக வோ திமுக வோ சுயேச்சை உறுப்பினர்களோ இதுவரை எதையும் சாதிக்க முடியவில்லை இனிமேலும் சாதிக்கும் அவர்களால் முடியாது
கையூட்டு பெற்று சாலை அமைப்பதும் ,திட்டத்தை நிறைவேற்றும் இவர்களால் மக்கள் நலனுக்காக எதை சாதிக்க முடியும்
யாரால் முடியும் மக்கள் மீது அக்கரையுள்ள ,ஊரின் மீது பற்றுள்ள ,வருங்கால சந்ததிகள் நலமுடன் வளமுடன் வாழ செயல் திட்டத்துடன் செயல் படும் உண்மையான அரசியல் கட்சியின் மூலம் மட்டுமே முடியும்
யார் அவர்கள்
இந்த மேலப்பாளையம் மக்களின் நலனுக்காக வீதி இறங்கி போராடும்
தூசி பறக்கும் சாலைகளை தரமான சாலை அமைக்க போராடிய கட்சி
கழிவு நீரால் முழ்கழிக்கபட்ட பாளையம் கால்வாய் மீட்டெடுக்க போராடிய கட்சி
தரமான குடிநீர் கிடைக்க வீதி இறங்கி போராடிய கட்சி
மழை காலங்களில் மக்களுக்கு டெங்கு மற்றும் விஷகாச்சலை தடுக்க வீதியெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பயன் பெற மருத்துவ முகாம்களை நடத்திய கட்சி
விபத்தோ ,அகால மரணமோ எந்த நேரத்திலும் மக்களுக்கு பாதிக்கப்பட்ட உடன் களத்தில் நிற்கும் கட்சி
பொய்யான காரணங்களை கூறி முஸ்லிம் இளைஞர்களின் கைதுக்கு எதிராக முதலில் களம் காணும் கட்சி
மக்கள் சேவைக்காக தங்களின் சுய தேவைகளையும் உதறிவிட்டு மக்கள் நலனுக்காக உழைக்கும் கட்சி
செய்த உதவிக்காக மக்களின் பாரட்டுகளை விட இறைவனின் உவப்பை பெற விரும்பும் கட்சி
மக்கள் நலனுக்காக தன்னை அனுதினமும் அர்ப்பணிக்கும் இந்த SDPI கட்சியே மேலப்பாளையம் மண்டலத்தை உறுதியாக கைப்பற்றும்
மக்களுக்காக என்றும் உழைத்திடும்
கடந்த சட்டமன்ற தேர்தலில் மேலப்பாளையம் மண்டலத்தில் அதிக வாக்குகளை பெற்றுள்ளது
என்பதை யாரும் மறுக்க முடியாது
வெற்றிக்கான வழி தொலைவில் இல்லை
இறைவனின் நாட்டத்தோடு SDPI கட்சி போட்டியிடும் அனைத்து இடங்களிலும் வெற்றி வாகை சூடும்
#முகம்மது இப்னு ஆதில்பரீத் -#மேலப்பாளையம்